Advertisement

Breaking News

மரணத்தின்_ஒத்திகை பெண்களுக்காக - Woman


                        மரணத்தின்_ஒத்திகை


எங்கோ 
யாரோ இருவருக்கு 
மகளாக பிறந்தாள் 

எனக்கு 
மனைவியாக வந்த பின்பு

அவளுக்கென்று இருந்த 
ஆசைகளை கனவுகளை
மறந்து விட்டாள்

இப்போது 
நான் அழுதால் அழுகிறாள் 
நான் சிரித்தால் சிரிக்கிறாள் 
நான் துடித்தால் துடிக்கிறாள்
எனக்காகவே வாழ்கிறாள்


ருசியாக உணவு சமைத்து தருகிறாள்
ரகசியமாக காதல் செய்கிறாள் 

காலையில் 
நான் எழும்புவதற்கு முன்பு 
அவள் எழுந்து விடுகிறாள் 

இரவில் 
வீடு வருவதற்க்கு தாமதம் ஆனால் 
நான் வரும் வரை 
தூங்காமல் விழித்திருக்கிறாள் 

மாதவிடாய் 
வலி அவளை கொல்லும் போதும் 
சிரித்துக் கொண்டே 
என் ஆடைகள் துவைக்கிறாள் 
வீட்டை சுத்தம் செய்கிறாள் 
அன்பாக பேசுகிறாள் 
அனைத்து வேலைகளையும் 
சளைக்காமல் செய்கிறாள் 

சில இரவுகளில் 
கட்டிலில் கலந்து 
இனிப்பான இன்பம் தருகிறாள்

ஓர் நாள் 
கர்ப்பம் ஆகி விட்டேன் என 
காதுக்குள்  சொல்லி 
மார்பில் சாய்ந்தால் 

பக்குவமாக 
குழந்தை போல் பார்த்துக் கொண்டேன் 

அவசரமாக 
வைத்தியசாலைக்கு கொண்டு சென்றேன்

ஒரு தாதிப் பெண் 
என்னையும் உள்ளே 
வர சென்னாள் 

இப்போது
அவள் அருகில் நான் 

கத்தினால் 
கதறினால் 
ஏதேதோ செய்தால் 

வலியால் 
அவள் துடிப்பதை பார்த்து 

என்னால் 
தாங்க முடியவில்லை 

அழ வேண்டும் என்றும் 
நான் நினைக்கவே நினைக்கவில்லை 

ஆனால்
என்னை அறியாமல் 
கண்ணீர் வருகிறது 
இந்த அன்புக்கு என்ன பெயர் என்று 
எனக்கு தெரியவில்லை 

சதை கிழிந்து 
குழந்தை வெளியில் வரும் போது 

அவள் 
அடைந்த வலியை 
கடவுள் கூட கவிதையில் 
சொல்லிவிட முடியாது 

பாதி குழந்தை 
வெளியில் வந்திருகையில் 

வலி தாங்க முடியாமல் 
கைகள் இரண்டையும் எடுத்து 
கும்பிட்டு அழுதால் 

எவ்வளவு 
வலி இருந்தால் 
அவள் கும்பிட்டு அழுதிருப்பால் 
என்று நினைக்கும் போது 

நான் துடிதுடித்து 
அவளை இருக அணைத்து கொண்டேன் 

ஒரு பெரிய 
சத்தமிட்டு மயங்கி சாய்ந்தால் 

ஒரு சில 
நிமிடங்களில்

குழந்தையை கையில் 
கொடுத்தார்கள் 

நான் 
அவள் நெற்றியில் முத்தம் வைத்து
இருக அணைத்து கொண்டேன் 

அவள்
அனுபவித்த வலி என்பது 
நிச்சயமாக மரணத்தின் ஒத்திகை
என்று உணர்ந்தேன் 

மரியாதை 
செய்யுங்கள் 
எம் இறைவிகளுக்கு 

நாம் நேசிக்கும் காதலிக்காகவும் 
நாம் நேசிக்க போகும்  மனைவிக்காகவும் 
நாம் நேசிக்கும் அம்மாவுக்காகவும் 
இந்த உலகில் வாழும் பெண்களுக்காகவும் 

இந்த 
வரிகளை 
சமர்ப்பிக்கிறோம்

நன்றிகள் கோடி 
பெண்களே...💓💓💓

www.nmsfriendsassociation.blogspot.com

2 comments:

  1. மனைவி என்பவள் நமக்காக தன்னை முழுவதும் அர்ப்பணித்து வாழ்கிறார் இதனால் நாம் பெண்மையை மதித்து பெண்மைக்கு மதிப்பு கொடுப்போம் நன்றி அருமையான பதிவு.

    ReplyDelete
  2. நம்மை ஈன்ற நம் தாய் ,
    நம் உடன் பிறந்த சகோதரிகள்
    நம் உடன் பிறவாத சகோதரிகள் ,
    நம்மை நம்பி வந்த மனைவி ,
    நம்மால் உலகுக்கு வந்த நம் குழந்தைகள் ,
    நாம் அன்றாடம் வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொரு பெண்களும் போற்றப்பட வேண்டும்.
    பெண்மையை போற்றுவோம் , அவர்களை பாதுகாப்போம்.

    ReplyDelete

Thanks